Sunday, May 8, 2011
தே.மு.தி.க., இலவச மையம் மூலம் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க., சார்பில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்தார். விழுப்புரம் தே.மு.தி.க., அலுவலகத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பயிற்சி மைய ஆசிரியர் பிரேமா வரவேற்றார். வடிவுக்கரசி, மல்லிகா, கேப்டன் மன்ற செயலாளர் ராஜசந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் இலவச பயிற்சி மையங்களை துவக்கி கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறோம். இது வரை 1500 பேர் பயனடைந்துள்ளனர். விஜயகாந்த் பிறந்த நாள்தோறும் நல உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2005ம் ஆண்டில் 35 லட்சம் ரூபாயில் கல்வி உதவித் தொகைகளும், 2007ல் பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார். 2008 முதல் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் 66 கம்ப்யூட்டர் மையங்களை அமைத்து பயிற்சி அளித்து வருகிறார். மாதத்திற்கு 13 ஆயிரம் செலவினம் செய்து மையத்தை நடத்துவது எளிதானதல்ல. அரசு விழாக்களில் இலவசங்களை கொடுத்துவிட்டு ஒரு சிலர் ஓட்டு கேட்டனர். அது போன்றல்ல இது, சேவை நோக்கத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் திருக்கோவிலூர், பகண்டை, செஞ்சியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் விரைவில் துவக்கப்படும். மின்வெட்டு, விலைவாசி உயர்வில் மக்கள் வெறுப்பில் உள்ளனர். பல கிராமங்களில் குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆட்சி மாற்றம் வரும், நிச்சயம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு வெங்கடேசன் பேசினார். பயிற்சி முடித்த 400 பேருக்கு சான்றிதழ்களும், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.
Thursday, February 24, 2011
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கைகோர்ப்பு: கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறும் என, ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் வகையில், இரு கட்சி நிர்வாகிகளும், திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். முதல் முறையாக, நேற்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது. தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை 5.30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதன்பின், இரு கட்சி நிர்வாகிகளும் 6.45 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கிருந்து தே.மு.தி.க., நிர்வாகிகள் புறப்படும்போது, பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் விரும்பியபடி, இரு கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. வரும் தேர்தலில், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஓரணியில் திரண்டு இந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில், விஜயகாந்த் பெரிதும் அக்கறை காட்டினார். மக்களின் விருப்பமும் நிறைவேறி உள்ளது. இந்தக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இரு கட்சியினரும், இன்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மீண்டும் பேசி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில், ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் நிறைவேறும் வகையிலும், மக்கள் உணர்வுக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும், மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற எண்ணம், அ.தி.மு.க., தலைமைக்கும், விஜயகாந்துக்கும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி, என்றார்.
பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:
* ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
ஆட்சியில் இடம்பெறும் ஆசையில்லை.
* அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது?
விரைவில் பேசுவோம்.
* எத்தனை இடங்கள் கேட்டிருக்கிறீர்கள்?
பேசி முடிவெடுப்போம்.
* இதுவரை, "மக்களுடன் கூட்டணி; தெய்வத்துடன் கூட்டணி' என்று மட்டுமே விஜயகாந்த் கூறி வந்தார். தற்போது அ.தி. மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே?
மக்கள் குரலே மகேசன் குரல். இந்த ஆட்சியை ஒழித்துக்கட்டி புதிய ஆட்சி மலர, மக்கள் குரலும், தெய்வத்தின் குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. அதன்படி தான், இந்த கூட்டணி அமைந்துள்ளது. விஜயகாந்த், ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பினார். அதை, கார்டனில் வழங்கியுள்ளோம். தொகுதி பங்கீடு முடிவை, இரு தலைவர்களும் ஒன்றாக அறிவிப்பர். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறும் என, ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் வகையில், இரு கட்சி நிர்வாகிகளும், திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். முதல் முறையாக, நேற்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது. தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை 5.30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதன்பின், இரு கட்சி நிர்வாகிகளும் 6.45 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கிருந்து தே.மு.தி.க., நிர்வாகிகள் புறப்படும்போது, பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் விரும்பியபடி, இரு கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. வரும் தேர்தலில், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஓரணியில் திரண்டு இந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில், விஜயகாந்த் பெரிதும் அக்கறை காட்டினார். மக்களின் விருப்பமும் நிறைவேறி உள்ளது. இந்தக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இரு கட்சியினரும், இன்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மீண்டும் பேசி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில், ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் நிறைவேறும் வகையிலும், மக்கள் உணர்வுக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும், மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற எண்ணம், அ.தி.மு.க., தலைமைக்கும், விஜயகாந்துக்கும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி, என்றார்.
பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:
* ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
ஆட்சியில் இடம்பெறும் ஆசையில்லை.
* அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது?
விரைவில் பேசுவோம்.
* எத்தனை இடங்கள் கேட்டிருக்கிறீர்கள்?
பேசி முடிவெடுப்போம்.
* இதுவரை, "மக்களுடன் கூட்டணி; தெய்வத்துடன் கூட்டணி' என்று மட்டுமே விஜயகாந்த் கூறி வந்தார். தற்போது அ.தி. மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே?
மக்கள் குரலே மகேசன் குரல். இந்த ஆட்சியை ஒழித்துக்கட்டி புதிய ஆட்சி மலர, மக்கள் குரலும், தெய்வத்தின் குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. அதன்படி தான், இந்த கூட்டணி அமைந்துள்ளது. விஜயகாந்த், ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பினார். அதை, கார்டனில் வழங்கியுள்ளோம். தொகுதி பங்கீடு முடிவை, இரு தலைவர்களும் ஒன்றாக அறிவிப்பர். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
Thursday, January 13, 2011
Thursday, December 30, 2010
என் எண்ணங்கள் நட்பு, தைரியம், உண்மை, மற்றும் நம்பிக்கைக்கு இல்லாத எல்லை பொறுமைக்கு உண்டு
நீதி எங்கே ?
எங்கு தேடினாலும் இன்றைய நிலையில் நீதி கிடைக்க வழியில்லாமல் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர்
தினகரன் அலுவலக தாக்குதல் - 09 மே 2007
சட்டகல்லூரி மாணவர்கள் மோதல் - 2008
உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல் - 2009
மேற்கண்ட இந்த குறிப்பிடும்படியான மிருகத்தாக்குதல்களில் காவல்துறைக்கு வேடிக்கைப்பார்க்கும் வேலையைத்தவிற வேறேதும் செய்யக்கட்டளையிடப்படவில்லை
தினகரன் அலுவலக தாக்குதலுக்கு காரணமாக இருந்த "தமிழகத்தின் அடுத்த முதல்வர்" கருத்துக்கணிப்பு முடிவுகள். மூன்று இளைஞர்களின் உயிரால் பசியாரிய ரௌடிகளின் தாக்குதலுக்கு பிறகு, தயாநிதியின் ராஜினாமா, கலைஞர் டி.வி உதயம், இரு குடும்பங்களின் பிரிவு என நிகழ்ந்த நாடகங்கள் தலைவரின் இதயம் இனித்து, கண்கள் பனித்து மீண்டும் கூட்டுக்களவானிகளாக சேர்ந்தனர்
தங்கள் சுயலாபத்திற்காகவும், குடும்ப நலனுக்காகவும் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு "இந்திய ராஜபக்ஷே"வாகவே செயல்பட்டார் நமது முதல்வர். இலங்கையிலிருந்து எவன் வாக்களிக்கபோகிறான் என எண்ணி இப்படி சும்மா இருந்தாரோ என்னவோ....????. மிக சிறந்த வசனகர்த்தா என ஏற்கனவே நிரூபித்த முதல்வர் காலை சிற்றுண்டிக்கு பிறகு மதிய உணவிற்க்கு முன்பு வரையில், உலகின் மிகச்சிறிய உண்ணாவிரதத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதையும் நிரூபித்தார்
பழைய தவறுகள் அனைத்தையும் நாம் மறக்கும் அளவுக்கு இவர்கள் நாளுக்குநாள் பெரிய கொடுமைகளை புரிந்து வருகின்றனர். மேற்கண்டதைப்போன்ற பாவச்செயல்களை இன்னும் மறவாமல் இருக்கிறோம் என்பதை நாம் அனைவருக்கும் உணர்த்த வேண்டும்
சிந்தியுங்கள்
தமிழன்,
வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்
1.தமிழ் நாட்டில் புகைந்து கொண்டிருந்த பார்ப்பன துவேஷம்.இதை திரு.ஈ.வே.ரா பயன் படுத்த தொடங்கிய தருணம்.இதில் உள்ள potential ஐ, இதை போர்வையாக பயன் படுத்தினால்,இமயமலையை கூட மறைத்து விடலாம் எனும் உண்மையை மு.க புரிந்துகொண்டார்.
2.செய்வதை விட பேசுவதே அதிக பலன் தரும் எனவும் புரிந்துகொண்டார்.எனவே நல்லதையே பேசி கெடுதலையே செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவும் அறிந்து கொண்டார்.
3 மனித மனதில் அன்பை வளர்ப்பதை விட துவேஷத்தை வளர்ப்பது லகுவானது; பிரித்தாளுவது மிகவும் சிறந்த முறை என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கற்று கொண்டார்.
4. பணத்தால் வாங்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.
இவ்வளவுக்கும் மேல் கடவுள் அருள் அவருக்கு பரிபூரணமாக இருந்தது.
1.அண்ணாவின் அகால மறைவு
2. இந்திரா காங்கிரசின் தோற்றம்
3.காமராஜின் மறைவு
4.MGR இன் தான் மலையாளி என்கிற அநாவசியமான தாழ்வு மனப்பான்மை
5.MGR இன் மறைவு
6.Jaya வின் முதிர்ச்சியற்ற,அகம்பாவம் நிறைந்த மனோபாங்கு(நினைத்து பாருங்கள்... மு.க, சோனியாவிற்கும் நண்பர்,அத்வானிக்கும் நண்பர். ஜெயா இருவருக்கும் எதிரி!!)
7.இரண்டு முறை கிடைத்த ஆட்சி பொறுப்பை ஜெயா முழுவதும் வீணடித்து மக்கள் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டது.
அப்போ நம்ம இக்கட்டு எல்லாம் எப்போ விலகும்?
அவருக்கு எப்போ டிக்கட் கிடைக்குதோ அப்போதான்!!
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி
கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.
இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.
பக்கம் 81,82 ல்..............
* விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.
இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.
பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.
இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30. அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40. முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44. முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும் , தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.
வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்
Subscribe to:
Posts (Atom)